மொறட்டுவையைப் பற்றி

வரலாறு

மொறட்டுவைநகரம் இலங்கையின் மேற்கே இந்தியப் பெருங்கடலில் கரையோரத்தில் ஒருஅழகியநிலப்பரப்பில் அமைந்துள்ளது. நகரமையத்தில் அமைந்துள்ளசுற்றுச்சூழல் அமைப்பானலுனாவைஏரியின் நகரின் வியப்படையக் கூடியகாட்சியைவழங்குகிறது. மொறட்டுவைபகுதியின் மொத்தபரப்பளவு 23.4 சதுரகிலோமீட்டர். 2011ஃ2012 மக்கள் தொகைகணக்கெடுப்பின் படி,மொத்தமக்கள் தொகை 166,857 ஆகவும், 42 கிராமஉத்தியோகத்தர் பிரிவுகளும் உள்ளன.

வரலாறு

மொறட்டுவைமற்றும் லக்ஷபதியஆகிய இரண்டும் 15ஆம் நூற்றாண்டின் கவிதைகோகிலாசந்தேஷாவில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது ஆறாம் பராக்கிரமபாகுஆட்சியின் போது இளவரசர் சபுமாலைமகிழ்விக்கபௌத்ததேரர் தேவேந்திராஎழுதியது. மொறட்டுவைகோட்டேகாலத்தில் பரேவிசந்தேஷயா மற்றும் கிராசந்தேஷயாவில் ஒருஅழகானகாட்சியாகஅடையாளம் காணப்பட்டுள்ளது.

முதலாம் விஜயபாகுமன்னனால் கட்டப்பட்டவிகாரையின் தலைமைப் பதவியில் இருந்துமறைந்தரெவததேரஎன்பவரின் கடிதத்தில் லுனாவ, உயன மற்றும் ராவதாவத்தஆகியவை 16ஆம் நூற்றாண்டின் காலக்கதைகளிலும்,தியாயிகளின் தேவாலயப் பதிவுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. நிஸ்ஸவங்கமல்லமன்னரின் தளபதியானலக்விஜயசிங்கு 100 ஆயிரம் ஆண்டுகளாகஅதிகாரம் செய்யலக்ஷபதியபரிசளிக்கப்பட்டநிலமேலக்ஷபதியவாகும்.

விஜயபாகொள்ளமற்றும் கோட்டே இராச்சியம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து,ரய்கம் கொரலஒருபகுதியாககோரலா-வெல்லவின் குக்கிராமம் உருவாக்கப்பட்டது. இது மீண்டும் 1735 இல் மொறட்டுவாவின் ஒருபகுதியாகமாறியது. இருப்பினும் ரத்மலானையும் பொறுபனவின் சிலபகுதிகளையும் தெஹிவளையிடம் இழந்ததுமொறட்டுவஎன்றபெயர் ‘முராஅதுவா’என்பதிலிருந்துஉருவானது. இதன் பொருள் சிங்களமொழியில் ‘காவலாளன் கோபுரம்’என்பதாகும்.

இது ஒருகாலத்தில் கல்தமுல்லாவில் இருந்தது. 1848 கிளர்ச்சியில் பிரிட்டிஷ் ஆட்சிக்குஎதிராகஒருதலைவராகபோராடியபிரபலபுரட்சியாளர் ‘வீரபுரண் அப்பு’மொறட்டுவாவில் பிறந்தார். அவரதுபிறந்தபெயர் வீரஹென்னெடிகேவீரபால ஜெயசூரியாபடபெண்டிபிரான்சிஸ்கோபெர்னாண்டோஅவரதுநம்பமுடியாததைரியமும் துணிச்சலும் பிரிட்டிஷ் அதிகாரிகலாள் பாராட்டப்பட்டது.

‘அவர் மரணதண்டனையைஎதிர்க்கொள்ளும் போது,அவர் மிகுந்ததுணிச்சலுடன் புல்லட்டைஎதிர்கொள்கிறார்.’ – சேர் எமர்சன் டெனன்ட் –

‘அவருடையகடைசிவார்த்தைகள்: மன்னருக்குஎன்னைப் போன்றநான்குபேர் இருந்தால்,கண்டியைப் பிடிப்பதுஎளிது.’ – கப்டன் ஹென்டர்சன் –

விளக்கப்படங்கள்

மொறட்டுவாநகரில் பௌத்தம்,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகியவற்றுடன் நீண்டகாலமாகதொடர்புபடுத்தப்பட்டஒருதனித்துவமானவாழ்க்கைமுறைஉள்ளது. இது பரஸ்பரம் மற்றும் கலாச்சாரரீதியாகவேறுபட்டது. 2011 மக்கள் தொகைகணக்கெடுப்பின்படி,மொறட்டுவாவின் மக்கள் தொகை 167,160 ஆகும்.

இனம் மக்கள் தொகைமொத்தம் மூ
சிங்களவர் 168,324 95.00
இலங்கைதமிழர்கள் 4,433 2.50
இந்தியத் தமிழர்கள் 375 0.21
இலங்கை முஸ்லிம்கள் 2,452 1.38
மற்;றவர்கள் (பர்கர்,மலாய் உட்பட) 1,606 0.91
மொத்தம் 177,190 100
மதம் மக்கள் தொகை மொத்தம் மூ
பௌத்தர் 124,205 70.00
கத்தோலிக்கர்கள் 33,893 19.1
மற்றகிறிஸ்தவர்கள் 11,806 6.7
இஸ்லாமியர் 3,311 1.9
இந்துமதத்தினர் 3,367 1.9
மொத்தம் 177,190 100

தொழில்கள்

மொறட்டுவையில் உள்ளதொழில்களில் களபாடங்கள்,ரப்பர் பொருட்கள்,பேட்டரிகள்,மின்மாற்றிகள் மற்றும் மரகைவினைப் பொருட்கள் ஆகியவைஅடங்கும். இந்தபுறநகர் பகுதிமீன்பிடிமற்றும் வர்த்தகமையமாகவும் உள்ளது. இவற்றில் மொறட்டுவைஅதன் தளபாடங்களுக்குமிகவும் பிரபலமானது. வரலாற்றுரீதியாக,காலனித்துவகாலத்தில் இலங்கைக்குவந்தபிரிட்டிஷ் எழுத்தாளர்களின் பதிவுகளில் தச்சுத் தொழில் பற்றியதகவல்கள் வெளிவந்துள்ளன.

‘இங்குவாழும் மக்கள் தச்சர்கள். தங்கள் சொந்ததச்சுகருவிகளைப் பயன்படுத்தி,அவர்களின் கைகளும் விரல்களும் சரியாகவேலைசெய்கின்றன. அவர்கள் திறமையானதொழாளர்கள் மற்றும் அழகானசெதுக்கள்களைசெய்கிறார்கள். அவற்றின் சிலஅலுமாரிகள் சிறந்தவை. மொறட்டுவையில் அழகியஏரிகரையோரத்தில்தென்னைஓலைகோட்டைகளின் கீழ் ஆயிரக்கணக்கானமேசைகள்,நாற்காலிகள்,வாங்குகள் மற்றும் கட்டில்கள் தயாரிக்கப்படுகின்றன.’ – ஹென்றிடபிள்யூ கேவ் (1890) –

தச்சுத் தொழில் இன்னும் மொறட்டுவைமக்களின் முக்கியவாழ்வாதாரமாகும். தற்போதுள்ளமரப்பொருட்களின் பெரிய இயந்திரமயமாக்கள்,முக்கியமாகமொறட்டுவமுல்ல, இண்டிபெட்ட,குடுலான,வில்லோராவட்டமற்றும் கொரலவெல்லபகுதிகளைஅடிப்படையாகக் கொண்டது. நவீனதொழில்நுட்பத்தைப் பயன்படுத்திபெரியஉற்பத்திமேற்கொள்ளப்படுகிறது.

தச்சுத் தொழிலின் மற்றுமொருமுக்கியபண்புஎன்னவென்றால்,அது இப்போதுபெரியஅளவிலானதொழிற்சாலைசார்ந்ததொழிலைக் காட்டிலும் வீட்டுஅடிப்படையிலானதொழிலாகஉள்ளது. இருப்பினும் நூற்றுக்கணக்கானஆண்டுகளின் வரலாற்றில் மிகச்சிறந்ததளபாடங்கள் தயாரிப்பதன் மூலம் மொறட்டுவைபெற்றநற்பெயர் அப்படியேஉள்ளது.

பழங்காலத்திலிருந்தேமொறட்டுவைமக்களுக்குமீன்பிடித்தலும் ஒருமுக்கியவாழ்வாதாரமாக இருந்துவருகிறது. கடலோரமீன்வளத் தொழிலிலும்,பொல்கொடநதிமற்றும் லுனாவஏரியிலும் வாழும் ஆயிரக்கணக்கானமக்கள் இன்னும் மொறட்டுவாவில் வசித்துவருகின்றனர். கடல் உணவுமற்றும் படகுகளைப் பயன்படுத்தும் பாரம்பரியமீன்வளமீன்வளம் இன்றுவரைதப்பிழைத்துவருகிறது. மேலும் மோதரைமீன்வளத் துறைமுகத்தைச் சுற்றியுள்ளநவீனமீன்பிடித் தொழில் இன்னும் செயல்பட்டுவருகிறது.

ஜாகோட்டு,வலைகள் மற்றும் படகுகள் ஆகியவற்றைப் பயன்படுத்திபோல்கோடாஆற்றின் நெடுகிலும் செயல்படும் நன்னீர் மீன்வளத் தொழில் இப்பகுதியின் பாரம்பரியஅழகைப் பேணுவதில் ஒருசிறப்புஅம்சமாகும்.

கல்வி

தெற்காசியாவின் முன்னணிதொழில்நுட்பபல்கலைக்கழகமானமொறட்டுவபல்கலைக்கழகம் மொறட்டுவையின் கட்டுபெத்தவில் உள்ளபொல்கொடாஏரியின் கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பிரபலமானஉயர்நிலைப் பள்ளிகளில் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் கல்லூரி,மொறட்டுவமஹாவித்தியாலயம் மற்றும் மெதடிஸ்ட் உயர்நிலைப்பள்ளிஆகியவைஅடங்கும்.

போக்குவரத்து

மொறட்டுவையிற்கானபிரதானபோக்குவரத்துசாலைபோக்குவரத்து இணைப்புபொழும்பு,காலி ஏ2 பிரதானவீதி (காலிவீதி) ஆகும். இது புறநகர்ப் பகுதியைவடக்குமற்றும் தெற்கிலிருந்து இணைக்கிறது. மொறட்டுவைநான்குபாலங்களால் இணைக்கப்பட்டுள்ளது. நகர் மையத்தில் பழையமொறட்டுவைபாலம்,புதியகாலிவீதிபாலம்,கோஸ்பலானபாலம் மற்றும் பொருபனவீதிபாலம் ஆகியஅனைத்தும் பால்கோடாஏரியின் குறுக்கேஅமைந்துள்ளன. இந்தநகரம் வடக்கேகாலிவீதியால் ரத்மலானவையும்,தெற்கேபாணந்துறையையும்,கிழக்கில் பிலியந்தரையையும் இணைக்கின்றது.

கொழும்பிலிருந்துமாத்தரைவரையிலானகடலோரரயில் பாதைமொறட்டுவைவழியாககடற்கரையோரம் செல்கிறது. இங்குலான,லுனாவ,மொறட்டுவை,கொரலவெல்ல,மற்றும் எகொடஉயனஆகிய இடங்களில் உள்ளரயில் நிலையங்கள் மொறட்டுவையில் வசிப்பவர்களுக்குசேவைசெய்கின்றன.

மொறட்டுவைமாநகர சபை உட்கட்டமைப்பு

மாகாணம் மேல் மாகாணம்
மாவட்டம் கொழும்பு
பிரதேசசெயலகம் மொறட்டுவை
வாக்காளர்கள் மொறட்டுவை
பரப்பளவு 23.4 சதுரகி.மீ
வட்டாரம்29
கிராமசேவகர் பிரிவு 42
குடும்பங்களின் எண்ணிக்கை 41,459 (ஆதாரம்: 2011/2012 மக்கள்
தொகைகணக்கெடுப்பு)
மக்கள் தொகை 166,857 (ஆதாரம்: 2011/2012
மக்கள் தொகைகணக்கெடுப்பு)
வாக்காளர்களின் எண்ணிக்கை 1116,884
மதிப்பிடப்பட்டசொத்துக்களின் எண்ணிக்கை67,568
சோலைவரிவீதம் – குடியிருப்பு 7%
சோலைவரிவீதம் – வணிகம்14%
சோலைவரிவீதம் – வெற்றுநிலம்20%
தெருவிளக்குகளின் எண்ணிக்கை8690
பொதுவானகிணறுகள்07
தார் சாலைகள் 84.15 கி.மீ
கான்கிரீட் சாலைகள் 16.45 கி.மீ
சரளைச் சாலைகள் 2.73 கி.மீ
கார்பெட் சாலைகள் 74.48 கி.மீ
இன்டர் லாக்கிங் கான்கிரீட் சாலைகள் 46.49கி.மீ
  1. விகாரைகள் (55)
  2. தேவாலயங்கள் (28)
  3. மசூதிகள் (01)
  4. இந்துகோவில் (01)